சென்னை:மின் வாரியத்தில், 228 உதவி பொறியாளர்களுக்கு, உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்தில், உதவி பொறியாளராக பணியில் சேருவோருக்கு, காலி பணியிடங்களுக்கு ஏற்ப, உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், மேற்பார்வை மற்றும் தலைமை பொறியாளராக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. பிரிவு அலுவலகங்கள், தலா, ஒரு உதவி பொறியாளரின் கீழ் செயல்படுகிறது.
அந்த பதவியில் இருப்பவர்களில், கல்வி தகுதி மற்றும் பணி மூப்பு அடிப்படையில், 228 பேருக்கு, உதவி செயற்பொறியாளராக பதவி உயர்வு வழங்கி, மின் வாரியம், நேற்று உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE