திருப்பூர்:கோவில்களில் திருப்பணி தாமதமாவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், தமிழகம் முழுதும், 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில், பழமை வாய்ந்த, 3 ஆயிரத்து 500 கோவில்களில், திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வருவாய் இல்லாத கோவில்களுக்கு, 5 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில், ஐநுாறுக்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது. ''இக்கோவில்களில், பெரும்பாலானவற்றில், பணிகள் முடங்கியுள்ளன'' என்கின்றனர் பக்தர்கள்.இதுகுறித்து கேட்டபோது, 'முன்பு, முதலிலேயே திருப்பணிக்கான நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டது. தற்போது, பொறியாளர்கள் பார்வையிட்ட பின், விடுவிக்கப்படுகிறது. ஆனால், அறநிலையத்துறையில் பொறியாளர் பற்றாக்குறையால், கோவில்களில் ஆய்வு செய்து, நிதியை விடுவிப்பதில் தாமதம் நிலவுகிறது. இதனால், மூன்று மாதங்களில், முடிய வேண்டிய பணி, ஓர் ஆண்டு கடந்தும் இழுத்தடிக்கப்படுகிறது'' என்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE