காஞ்சிபுரம் : மது குடிப்பதற்காக, திருட்டில் ஈடுபட்ட நபரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார், 40; மூட்டை துாக்கும் தொழிலாளி. குடி பழக்கத்திற்கு அடிமையான அவர், வருமானம் இல்லாததால், திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.இரு தினங்களுக்கு முன், சின்ன காஞ்சிபுரத்தில், பூட்டிய டீ கடையை திறந்து, கல்லா பெட்டியில் இருந்த பணத்தை திருடியுள்ளார்.அப்போது, பணியில் ஈடுபட்ட போலீசார், இதை பார்த்துள்ளனர். போலீசார் இருப்பதை அறிந்த சசிகுமார், சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றார். ஆனால், போலீசார் அவரை துரத்தி பிடித்தனர்.போலீசார் விசாரணையில், தினமும் குடிப்பதற்காக, சின்ன சின்ன திருட்டில், சசிகுமார் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE