திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த ஆர்பிட்ரேசன் கவுன்சில், கொரோனாவுக்குப்பின் மீண்டும் வழக்குப்பதிவுகளை துவக்கியுள்ளது.ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்கள், புகார் அளித்துவருகின்றன. கடந்த மூன்று மாதங்களில், மொத்தம் 10 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.திருப்பூர் - அவிநாசி ரோடு பகுதியைச்சேர்ந்த ஒரு நிட்டிங் நிறுவனம், திருமுருகன்பூண்டியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்துக்கு, டிசைன்களுடன் கூடிய துணி தயாரித்து கொடுத்துள்ளது. மூன்று மாதமாகியும் துணிக்கான தொகை 6.50 லட்சம் ரூபாயை வழங்காமல், ஏற்றுமதி நிறுவனம் இழுத்தடிப்பதாகவும், தொகையை பெற்றுத்தரக்கோரியும், நிட்டிங் நிறுவனம் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்து, ஆர்பிட்ரேசன் கவுன்சில் விசாரித்துவருகிறது.ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறியதாவது:ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து, துணிக்கான தொகை, 6.50 லட்சம் ரூபாயை பெற்றுத்தர கேட்டு, நிட்டிங் நிறுவனம் வழக்குப்பதிவு செய்துள்ளது; இந்த வழக்கு மீதான விசாரணைகள் நடந்து வருகிறது. ஆடை ஏற்றுமதி நிறுவனமோ, டிசைனர் துணியில் மாறுபாடுகள் இருப்பதாகவும்; இதற்காக, நிட்டிங் நிறுவனத்திடமிருந்து தங்களுக்கு இழப்பீடு பெற்றுத்தரவேண்டும், என்கிறது.இது, சற்று புதுமையான வழக்காக பார்க்கப்படுகிறது. டிசைனர் துணியின் அம்சங்கள் குறித்து, கவுன்சிலின் தொழில்நுட்ப குழு, ஆராய்ச்சி நடத்திவருகிறது. ஆய்வுக்குழுவினர் துணி குறித்து அளிக்கும் விவரங்கள் பதிவு செய்யப்படும். அதன்பின், நிட்டிங் நிறுவனம் - ஏற்றுமதி நிறுவன பிரதிநிதிகளை அழைத்து, நேரடி விசாரணை நடத்தப்படும்.டிசைன் துணி தயாரிப்பு சிக்கல்கள் நிறைந்தது; நிட்டிங் நிறுவனங்கள், மிக கவனமாகவும், ஆர்டர் வழங்கும் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் குறிப்பிடும் வழிகாட்டுதல்களை பின்பற்றி, மிக நுட்பமாக துணி உற்பத்தி செய்யவேண்டும்; இதன்மூலம், இதுபோன்ற பிரச்னைகளை எதிர்காலத்தில் தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE