திருப்பூர்:காலேஜ் ரோட்டில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவு நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியதால், அவதி ஏற்பட்டது.திருப்பூர், காலேஜ் ரோடு, ஓடக்காடு பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி உள்ளது. இதில் காலேஜ் ரோடு, ரயில்வே பாலம் செல்லும் வழி அருகேயுள்ள ஆழ்இறங்கு குழியில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் கழிவு நீர் ஊற்று போல் பெருக்கெடுத்து ரோட்டில் வழிந்தோடியது.தாழ்வான பகுதியாக உள்ளதால் ரோட்டிலும், அருகேயுள்ள ரயில்வே தரைப்பாலம் பகுதியிலும் கழிவு நீர் கடும் துர்நாற்றத்துடன் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள், அப்பகுதி கடைக்காரர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.நேற்று காலை திருப்பூர் பகுதியில் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாகவும் நீர் பெருக்கெடுத்து சில இடங்களில் பாதாள சாக்கடையில் சங்கமித்தது. இதனால், கழிவு நீர் பெருமளவு வெளியேறியதால் அவதியை ஏற்படுத்தியது.தகவல் அறிந்து மாநகாராட்சி சுகாதாரப் பிரிவினர், பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன ரோபோ இயந்திரம் மூலம் சாக்கடை அடைப்பை சரி செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE