அனுப்பர்பாளையம்:திருப்பூர், அடுத்த வள்ளிபுரம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது.திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், பங்கேற்று மூன்று சுய உதவி குழுக்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் ஆறு லட்சம் ரூபாய் கடன் வழங்கினார்.இதில், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள், மாவட்ட கவுன்சிலர் சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா மஹராஜ், ஊராட்சி தலைவர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE