திருப்பூர்:சிக்கண்ணா அரசு கலை அறிவியல் நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 மற்றும் திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத நிறைவு விழா கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார்.ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பேசுகையில், ''இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். மாணவர்கள் உங்கள் பகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அனைவரும் காவல் துறையினருடன் இணைந்து விபத்தில்லா திருப்பூரை உருவாக்க வேண்டும்,'' என்றார்.'மெஜஸ்டிக்' கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். போக்குவரத்து உதவி கமிஷனர் கொடிச்செல்வன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், தினேஷ், கணேஷ், கல்லுாரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ செயலாளர்கள் சந்தீப் மற்றும் காமராஜ் தலைமையில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.போக்குவரத்து விதிமுறைகள் எடுத்துரைக்கும் விதமாக மஞ்சள், சிவப்பு, பச்சை விளக்குகள், இருசக்கர வாகனங்கள், விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் எமதர்ம ராஜா வேடமிட்ட மாணவன் என, சிறப்பு செல்பி கார்னர் அமைக்கப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE