பொங்கலுார்:கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த தக்காளி. பருவம் தவறி பெய்த தொடர் மழையால் அழுகியது. தை, மாசி மாதங்கள் தக்காளி சீசன் காலம்.வழக்கமாக சீசன் காலத்தில் விலை கிடைக்காது. ஆனால், இந்த ஆண்டு தக்காளி அழுகி காய் வரத்து குறைந்துள்ளது. எனவே, தக்காளிக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.கார்த்திகை பட்ட சாகுபடி கை கொடுக்காத நிலையில், பொங்கலுார் பகுதி விவசாயிகள் மாசி பட்ட சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மாசி பட்டத்தில் நடவு செய்யப்படும் தக்காளி சித்திரை, வைகாசி மாதங்களில் அறுவடைக்கு வரும். அதிக மழை மற்றும் அதிக வெப்பம் தக்காளிக்கு ஒத்து வராது. மாசிப்பட்ட தக்காளி அறுவடைக்கு வரும்போது கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கிவிடும்.வெயிலின் உக்கிரத்தால் செடிகள் காய்ப்புத் திறன் குறைந்துவிடும். இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி லாபம் ஈட்ட விவசாயிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE