திருப்பூர்:கோட்டை ஸ்ரீமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா, 24ம் தேதி நடைபெற உள்ளது.திருப்பூரின் காவல் தெய்வமாக கருதப்படும் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடக்கிறது. இந்தாண்டு பொங்கல் விழா, பூச்சாட்டுடன் 16ம் தேதி துவங்கியது.நாளை (22 ம் தேதி) விநாயகர் பொங்கல் விழா, முளைப்பாலிகை, பால்குடம், தீர்த்தக்குடம் ஊர்வலம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி; 23ம் தேதி படைக்கலம் மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடக்கிறது.வரும், 24ம் தேதி மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பொங்கல் விழாவும், 25ல் மஞ்சள் நீராட்டு விழாவும், 26 ம் தேதி அன்னதானமும் நடக்கிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு, நாளை சமயபுரம் மாரியம்மன் அலங்காரம்;வரும் 23ம் தேதி ஆதிபராசக்தி அலங்காரம், 24ம் தேதி கோட்டை மாரியம்மன் தங்க கவச அலங்காரம், 25ம் தேதி பண்ணாரி மாரியம்மன் அலங்காரம், 26 ல், மீனாட்சி அம்மன் அலங்கார பூஜைகள் நடக்கின்றன.கோட்டை மாரியம்மன் கோவில் விழா கமிட்டியினர், பொங்கல் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE