திருப்பூர்:பல்லடம் அருகே செம்மிபாளையம் ஊராட்சி நேரு நகர் முதல் ஆறாக்குளம் ரோடு கைக்காலன்குட்டை வரை 1.4 கி.மீ துாரம் வரை மண் பாதையாக உள்ளது.விவசாய நிலங்கள் அதிகமுள்ள பகுதி என்பதால், பொதுமக்கள் பலர் இவ்வழியை பயன்படுத்தி வருகின்றனர்.மன் ரோட்டை தார் ரோடாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், தார் ரோடு போட நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே, 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இப்பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. எம்.எல்.ஏ நடராஜன், பணியை தொடங்கி வைத்தார். அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சித்துராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE