திருப்பூர்:திருப்பூரை அடுத்த பல்லகவுண்டம்பாளையத்தில் உள்ள ஓட்டலில், 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக பொதுமக்கள் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.இதனால், இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், விற்பனை செய்யப்பட்டு வந்த 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.இதேபோல், மண்பானை சமையல் என்ற பெயரில், வீடு, பண்ணை வீடு, தோப்பு போன்ற இடங்களில் செயல்படும் உணவகங்களில் சட்டவிரோதமாக மது விற்று வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE