கோவை:கோவையில் நேற்று, 46 பேர் கொரோனா தொற்று குணமடைந்ததால், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் நேற்று, 47 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 55 ஆயிரத்து, 415 ஆக உயர்ந்தது. உயிரிழப்பு ஏதும் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 679 ஆக உள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.கோவையில், இதுவரை 54 ஆயிரத்து, 328 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 408 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE