விருதுநகர்: விருதுநகரில் பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். கிளை தலைவர்கள் உதயக்குமார், ராஜையா கொடி ஏற்றினர். மாவட்ட நிர்வாகி குருசாமி வரவேற்றார். மாநில செயலாளர் பாபுராதாகிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சமுத்திரக்கனி, பொருளாளர் இளமாறன், அகில இந்திய பட்டதாரி பொறியாளர்கள், தொலை தொடர்பு அதிகாரிகள் சங்க மாநில தலைவர் விக்டர் சாம்சன், சஞ்சார் நிகாம் அதிகாரிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் அஸ்ரப்தீன், அகில இந்திய பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஜேசுராஜா பேசினர். 4ஜி சேவையை உடனடியாக வழங்குவது, ஊழியர்களுக்கு பிரதி மாதம் 1ம் தேதி ஊதியம் வழங்குவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவராக கனகராஜ், செயலாளராக குருசாமி, பொருளாளராக இளமாறன் தேர்வு செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE