தேனி:பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றாவிடில் இச்சமூக ஆதரவு மத்திய அரசுக்கு கிடைக்காது என்பதை உணர்த்த வேண்டும்.'' என, தேனி மாநாட்டில் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
தேனியில், நடந்த தமிழக வளர்ச்சி அரசியல் மாநாட்டில் பங்கேற்ற அவர் மேலும் பேசியதாவது: ஆறு உட்பிரிவுகளை ஒரே பெயரில் கொண்டு வந்து பட்டியலினத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்தோம். இதற்கான திருத்த மசோதா மத்திய அரசு கொண்டு வந்ததன் மூலம், நம் கோரிக்கையில் பாதியைத்தான் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
தேனி எம்.பி., ரவீந்திரநாத், பட்டியல் வெளியேற்றம் குறித்து லோக்சபாவில் எதுவும் பேசவில்லை. இனி நமக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் தேவேந்திர குல வேளாளர்' என்றே இருக்கும். அரசுத்துறை வேலைவாய்ப்புக்களில் நமக்கு முன்னுரிமை கிடைக்க வேண்டும் எனில் பட்டியலினத்தில் இருந்து வெளியேற்றம் செய்வதே சிறந்த தீர்வு. அப்போதுதான் நாம் பொருளாதாரத்திலும், சமூக சாதிய வன்மத்தில் இருந்தும் நிரந்தரமாக தப்பித்து, தலை நிமிர முடியும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE