பொள்ளாச்சி:பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, நாளை (22ம் தேதி) நடக்கிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலமாணிக்கம் வீதி, காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 19ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது.நேற்று காலை, 9:00 மணிக்கு பஞ்சகவ்ய பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகளும், இரவு, 7:00 மணிக்கு முதல் கால யாக பூஜையும் நடந்தது.
இன்று (21ம் தேதி), காலை, 10:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோபுர கலசங்கள் பிரதிஷ்டை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை, இரவு, 9:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் பூஜை நடக்கிறது.நாளை (22ம் தேதி) காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையை தொடர்ந்து, யாத்ரதானம், கலசங்கள் புறப்படுதலும், காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம், பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேக விழா நடக்கிறது.
அதன்பின், காமாட்சி அம்மனுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது. நாளை மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
கும்பாபிஷேக வைபவத்தை,பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் நல்லசாமி சிவாச்சாரியார், திருநள்ளார் ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் பரம்பரை பூஜாஸ்தானிகர் ராஜசுவாமிநாத சிவாச்சாரியார், பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் சிவாநந்த சிவாச்சாரியார் நடத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE