மதுரை: மதுரையில் புறநகர் பா.ஜ., கல்வியாளர் பிரிவு சார்பில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனர் இப்ராஹிம் எழுதிய 'ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயலிருந்து' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.கல்வியாளர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் ராஜசேகரன் தலைமை வகிக்க, தலைவர் காசிநாதன் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் வரவேற்றார். பா.ஜ., மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் நுாலை வெளியிட, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறக்கட்டளை தலைவர் சேக்சலீம் பெற்றார்.பா.ஜ., சிறுபான்மையினர் அணி மாநில துணை தலைவர் ஷா, மாவட்ட தலைவர் சுசீந்திரன், இந்திய கிறிஸ்தவர் முன்னணி தலைவர் சுந்தரம், திறனாய்வாளர் சிவராமசுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். செயலாளர் சிவராமன் நன்றி கூறினார். நிர்வாகிகள் ராஜேஷ், செல்வமணிகண்டன், சரவணப்பெருமாள், பிரதீஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE