சேலம்:ரயில்வே பால கட்டுமானப்பணிக்கு, மதுரை - திருநெல்வேலி இடையிலான பாதையில், சில சிறப்பு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பெங்களூரு - நாகர்கோவில் சிறப்பு ரயில், பிப்., 23 முதல், 27 வரை, விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், 24 முதல், 28 வரை, விருதுநகரில் இருந்து இயக்கப்படும். விருதுநகர் - நாகர்கோவில் இடையே, சேவை ரத்து செய்யப்படும்.தாதர் - திருநெல்வேலி சிறப்பு ரயில், பிப்., 25ல், விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படும். விருதுநகர் - திருநெல்வேலி சேவை ரத்து செய்யப்படும்.
மைசூரு - துாத்துக்குடி சிறப்பு ரயில், பிப்., 27ல், மதுரை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில், 28ல், மதுரையில் இருந்து புறப்படும். மதுரை முதல், துாத்துக்குடி வரையான சேவை ரத்து செய்யப்படும். இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE