உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரியில் முத்துராமலிங்கத்தேவர், கல்லுாரி நிறுவனர்கள் மூக்கையாத்தேவர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி நடராஜன் ஆகியோரது படத்திறப்பு விழா நடந்தது.முதல்வர் ரவி வரவேற்றார். தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் பாண்டியன், பொருளாளர் வனராஜா, நிர்வாகக்குழு உறுப்பினர் பாஸ்கரபாண்டியராஜா, பி.கே.எம்., அறக்கட்டளைத் தலைவர் சின்னன், பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். சென்னை வருமான வரித்துறை கமிஷனர் அருண்பாரத், கல்லூரி நிறுவனரின் குடும்பத்தினர்கள் கணேஷ்நடராஜன், ராஜேஸ்வரிகாசிநாதன் கலந்துகொண்டனர். துணைமுதல்வர் ஜோதிராஜன், சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், கல்லூரி நிர்வாக அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE