உசிலம்பட்டி: உசிலம்பட்டி வட்டார வேளாண்மை துறை மூலம் தமிழ்நாடு பருத்தி பெருக்கு திட்டம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.துணை இயக்குனர் அமுதன், இணை இயக்குனர் ராமசாமி, துணை வேளாண் அலுவலர் புவனேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேர்வான விவசாயிகளுக்கு 3 கிலோ உளுந்து விதையுடன், களைக்கொல்லி, வேப்ப எண்ணெய், இனக்கவர்ச்சி பொறி உள்ளிட்ட ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள இடுபொருட்கள் முழு மானியத்தில் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE