ஊட்டி:ஊட்டியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், மலர் நாற்றுகளை பாதுகாக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 'மைனஸ் 1' டிகிரி செல்சியஸ் அளவுக்கு பனியின் தாக்கம் உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை, வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.தாவரவியல் பூங்காவில், நடப்பாண்டு கோடை விழாவுக்காக, ஐந்து லட்சம் மலர் நாற்றுகளை தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. பனியால் மலர் நாற்றுகள் பாதிக்காமல் இருக்க நீர் பாய்ச்சப்பட்டு வருவதுடன், 'கோத்தகிரி மலார்' என்ற செடியால் மூடி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறுகையில், ''உறை பனியில் இருந்து மலர்களை பாதுகாக்க, அனைத்து பூங்காக்களிலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE