கொடைக்கானல்: கொடைக்கானல் பிரையன்ட் பூங்கா -- கோக்கர்ஸ் வாக் இடையே உள்ள ரோடு சேதமடைந்து உள்ளதால் பயணிகள் தடுமாறும் நிலை உள்ளது.இந்த ரோடு கீழ்குண்டாறு குடிநீர் திட்டத்திற்காக பைப்லைன் அமைக்க தோண்டப்பட்டது. அப்போது இதில் பதிக்கப்பட்ட பேவர்பிளாக் கற்கள் சிதிலம் அடைந்தன. இவற்றை சீரமைக்காமல் விட்டுவிட்டதால் ஆங்காங்கே கற்கள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடைபயணமாக கோக்கர்ஸ் வாக் மற்றும் பிரையன்ட் பூங்கா செல்வோர் தடுமாறுகின்றனர். ரோட்டை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் சுற்றுலா நகரின் தரம் குறித்து பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE