வேடசந்துார்: வேடசந்துார் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஆதி திராவிட விவசாயிகளுக்கானவேளாண் பயிற்சி முகாம் நடந்தது.நிலைய தலைவர் பொன்.மணிவேல் தலைமை வகித்தார்.முதன்மை விஞ்ஞானி குமரேசன் முன்னிலை வகித்தார். வேளாண் தொழில் நுட்பங்கள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. முடிவில் 30 விவசாயிகளுக்கு தலா 20 கிலோ விதை நிலக்கடலைஇலவசமாக வழங்கப்பட்டது. வேளாண் பண்ணையில் சாகுபடி செய்த பயிர் வகைகள் மற்றும் விளைச்சல் குறித்தும், தேனி வளர்ப்புகுறித்தும் விளக்கப்பட்டது. விஞ்ஞானி வெங்கடேஷ், தொழில் நுட்ப அலுவலர் முருகானந்தம்உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE