பந்தலுார்:கூடலுார் வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் மூங்கில்கள் மொத்தமாக பூத்து காணப்படுவதால், காட்டு யானைகள் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை களின் முக்கிய உணவாக மூங்கில் உள்ளது. அதில், புலிகள் காப்பக வளர்ப்பு யானைகளுக்கு காப்பக உணவு மட்டுமின்றி, மூங்கில் தழைகள் மற்றும் பிற தாவரங்களும் உணவாக வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், அனைத்து பகுதிகளிலும் மூங்கில்கள் மொத்தமாக பூத்து, மூங்கில் அரிசி விளைந்து காணப்படுகிறது. இதனால், யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு நோக்கி வருவதும், விவசாய நிலங்களை சேதப் படுத்தியும் வருகிறது.மறுபுறம், புலிகள் காப்பக வளர்ப்பு யானைகள் உணவு பற்றாக்குறையை சமாளிக்க, வனங்களில், பூத்துள்ள மூங்கில்களை உணவுக்காக, சேகரித்து வந்து உண்ண வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே, யானைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வனத்துறை சார்பில் மூங்கில் நாற்றுகளை அதிகளவில் நடவு செய்து வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE