திண்டுக்கல்: டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து திண்டுக்கல்லில் நேற்று தி.மு.க.,வினர் சைக்கிள் பேரணி நடத்தினர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயரும். ஏழைகள் பாதிக்கப்படுவர் எனக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க., வினர் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் சப்-கலெக்டர் ரோடு, ஏ.எம்.சி ரோடு, சாலை ரோடு, மெங்கில்ஸ் ரோடு சுற்றி மீண்டும் தி.மு.க., கட்சி அலுவலகம் வந்து சேர்ந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். துணை செயலாளர் நாகராஜ், நகரச் செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE