கள்ளிமந்தையம்: 'சிட்டா இல்லாமல் பெற்ற நகைக்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்' என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.அப்பியம்பட்டி விவசாயி கந்தசாமி விவசாயிகள் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:அனைத்து விவசாயிகள் பெற்ற பயிர் கடன் ரூ.12 ஆயிரத்து 120 கோடி கடனை தள்ளுபடி செய்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். குத்தகை விவசாயம் செய்யும் விவசாயிகள் சிட்டா கொடுக்காமல், நகையை வைத்து பயிர்கடன் பெற்றுள்ளனர். அதை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த குத்தகை விவசாயிகள் சிட்டா இல்லாமல் நகையை அடமானம் வைத்து பயிர்கடன் பெற்றுள்ளனர். அதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE