கூடலுார் - கூடலுாரில் இருந்து குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு செல்லும் ரோட்டில் முழுமையாக தார் அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் இருந்த கூடலுார்- -குள்ளப்பகவுண்டன்பட்டி ரோடு சமீபத்தில் சீரமைக்கப்பட்டது. துவக்கத்தில் இருந்து ஒன்றரை கி.மீ., துாரம் மட்டுமே தார்ரோடு அமைக்கப்பட்டது. மீதமுள்ள இரண்டரை கி.மீ., துார ரோட்டை சீரமைக்கவில்லை. இது வாகன ஓட்டிகளை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கழிவு நீரோடையை ஒட்டி செல்லும் இந்த ரோட்டில் தடுப்புச்சுவரும் கட்டாதது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.உயரதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE