தேனி - மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்ட வாக்காளர்களை கண்டறிய தி.மு.க.,வில் ஓட்டுச்சாவடி முகவர் நிலை - 2' என்ற புதிய பணியிடத்தில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்,'' என, தேனிவடக்கு மாவட்டச்செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் வாதாடி, ஓட்டுச்சாவடி முகவர் நிலை - 2' என்ற புதிய பணியிடத்தில் முகவர்கள் பணியாற்ற ஒப்புதல் பெற்றுத்தந்துள்ளார். இப்பணியானது 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர், தபால் முறையில் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்ய உரிமை உள்ளவர்களை கண்டறிவது ஆகும். இதில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆய்வு பெரியகுளம் (தனி), போடி சட்டசபை தொகுதிகளில் நடத்தப்பட்டது, ''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE