தேனி - மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்த 8 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். புதிதாக ஒருவர் பாதிப்பு. நேற்று கொரோனாவுக்கான முதல் டோஸ் தடுப்பூசி மருந்து 96 பேருக்கு செலுத்தப்பட்டது. இதில் ஏழு பேருக்கு மட்டும் மாநில பொது சுகாதாரத்துறையால் புதிதாக வழங்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 3429 பேர் செலுத்தியுள்ளனர். இரண்டாவது 'டோஸ்' ஆன கோவிஷீல்டு நேற்று 163 பேருக்கு செலுத்தப்பட்டது. இது இதுவரை 501 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE