தேனி - நிதி மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத டாக்டரை தேடப்படும் நபராக, மதுரையில் உள்ள முதலீட்டாளர் நல பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. தேனி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பாண்டிச்செல்வம் கூறியதாவது:போடி தென்றல்நகர் டாக்டர் முரளிதரன். நண்பர்களுடன் இணைந்து நிதி நிறுவனம் நடத்தினர். நிறுவனம் திடீரென மூடப்பட்டது. பணம் செலுத்தியவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆறு முதலீட்டாளர்களிடம் ரூ.10 லட்சம் அளவில், நிதி நிறுவன நிர்வாகிகள் மோசடிசெய்தனர்.இது குறித்து முரளிதரன் உட்பட 4 நபர்கள் மீது, மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. டாக்டர் முரளிதரன் தற்போது தலைமறைவாக உள்ளார். வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு சென்று, குடியுரிமை பெற்று விட்டார். அதனால் டாக்டர் முரளிதரனை தேடப்படும் குற்றவாளியாக மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.இதையடுத்து போடியில் உள்ள டாக்டரின் வீடு, பஸ் ஸ்டாண்ட், பொது மக்கள் கூடும் இடங்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளோம்.'', என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE