பல்லாவரம் - திரிசூலத்தில், கிரஷர் பெல்டில் சிக்கி, ஆண்றுப்பு காயமடைந்த ஊழியர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பல்லாவரத்தை அடுத்த திரிசூலத்தில் இயங்கி வரும் கிரஷர் ஒன்றில், திரிசூலம், சிவசக்தி நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, 55, என்பவர், வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், கிரஷர் பெல்ட் அவிழ்ந்து விட்டது. கிருஷ்ணசாமி, அந்த பெல்டை மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த மற்றொரு பெல்ட்டில், அவரது லுங்கி மாட்டிக்கொண்டு, அதோடு சேர்ந்து, ஆணுறுப்பும் சிக்கி, காயம் ஏற்பட்டது.அங்கிருந்தவர்கள், அவரை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து, பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE