புதுச்சேரி : கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதத்தை உயர்த்த சுகாதாரத்துறை அதிகாரிகளின்ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை மற்றும் முன்கள பணியாளர்கள் ( வருவாய், போலீஸ், உள்ளாட்சி) துறைகள் சார்ந்த ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஜனவரி 16ம் தேதி முதல் போடப்படுகிறது.தடுப்பூசி போட்டுக் கொள்வோர் விகிதத்தை அதிகரிக்கவும், அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட ஊக்குவிக்க சுகாதாரத் துறை மற்றும் பிற துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.சுகாதாரத்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார், புதுச்சேரி சுகாதார இயக்கத்தின் இயக்குநர் ஸ்ரீராமலு உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவர்களும், தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முன் கள பணியாளர்களுக்கு மார்ச் 6ம் தேதியுடன் முதல் கட்ட தடுப்பூசி போடும் பணி நிறைவு பெறுவது குறிப்பிடதக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE