சென்னை: சென்னையில், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு, பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில், நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை, சென்னை மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவு அதிகாரி ஹேமலதா, சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்பு படை முதன்மை தலைமை கமிஷனர் செந்தில் குமரேசன் ஆகியோர் துவங்கி வைத்தனர். முகாமில், ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த நான்கு இன்ஸ்பெக்டர்கள், ஐந்து எஸ்.ஐ.,க்கள், காவலர்கள் என, 43 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.சென்னை ரயில்வே கோட்டத்தில் பணிபுரியும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அனைவருக்கும், அவரவர் பணிபுரியும் இடங்களுக்கு அருகில் உள்ள, தடுப்பூசி மையங்களிலும், மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொ ள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE