அடையாறு ; சென்னை, கண்ணகி நகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் இஸ்ரேல், 22; எலக்ட்ரீஷியன். நேற்று முன்தினம் இரவு, பட்டினப்பாக்கத்தில் இருந்து, வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டார்.அடையாறு, திரு.வி.க., பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த மாநகர பஸ் மோதியது. இதில், இஸ்ரேல், பஸ் சக்கரத்தில் சிக்கி பலியானார். அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், பஸ் ஓட்டுனரான, திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 40, என்பவரை, கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE