ஆவடி: தனியார் கட்டடத்தில் இருந்து, கட்டுமான பொருட்களை திருடிய இருவர் கைதாகினர்.சென்னை, ஆவடி, சி.டி.எச்., சாலையில், தனியார் நிறுவன கட்டடத்தில், பூபாலன் என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்தாண்டு, டிச., 12ம் தேதி, இரவுப்பணியில் இருந்தார்.அப்போது, அங்கிருந்த இரும்பு குழாய் உட்பட, 3.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் திருடு போயின. காவலாளியும் தலைமறைவானார். அந்நிறுவன அலுவலர் கோபாலகிருஷ்ணன், 29, ஆவடி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், காவலாளி பூபாலன் உதவியுடன், தாம்பரம், கிருஷ்ணா நகரைச் சேர்ந்த முகைதீன் அப்துல் காதர், 54, வேளச்சேரி, லட்சுமி நகரை சேர்ந்த வேணு கோபால், 42, ஆகியோர் திருடியது தெரியவந்தது. தலைமறைவாக இருந்தவர்களில், மேற்கண்ட இருவரையும், ஆவடி போலீசார், நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, திருடு போன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE