மீஞ்சூர்; 'அம்மா மினி கிளினிக்' திறப்பு விழாவிற்கு வந்த கலெக்டரிடம், 546 குடும்பங்களுக்கு பட்டா கேட்டு மனு அளிக்கப்பட்டது.மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் நேற்று, பொன்னேரி எம்.எல்.ஏ., பலராமன் தலைமையில், அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது.இதில், கலெக்டர் பொன்னையா, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் பிரபாகர், பொன்னேரி ஆர்.டி.ஓ., செல்வம், தாசில்தார் மணிகண்டன், மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.விழாவின்போது, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி, அத்திப்பட்டு புதுநகர் பகுதியில், 32 ஆண்டுகளாக வசித்து வரும், 546 குடும்பங்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE