கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக்கில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்க்காணல் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 44 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட உள்ளது. இதில், பல்நோக்கு மருத்துவ பணியாளர், உதவியாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 44 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இப்பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் கடந்த 6ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை பெறப்பட்டது. மொத்தம் 552 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இவர்களுக்கான நேர்க்காணல், கள்ளக்குறிச்சி சுகாதாரபணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.விண்ணப்பதாரர்களை தாலுகா வாரியாக பிரித்து, சான்றிதழ் சரிபார்ப்புகள் நடந்தது. தொடர்ந்து சுகாதார பணிகள் துணை இயக்குநர் சதீஷ்குமார், கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் சிவக்குமார், டாக்டர் மணிரத்னம், புள்ளியியல் உதவி இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோர் விண்ணப்பதாரர்களிடம் நேர்க்காணல் நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE