திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த திடீர் மழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து துவங்கியது.யாரும் எதிர்பாராத வகையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை திடீரென நீர்வரத்து துவங்கியது. திருக்கோவிலுார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் சாகுபடிக்காக சாத்தனுார் அணையில் இருந்து மார்ச் 9ம் தேதி முதல் தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுப்பணித்துறை சார்பில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இந்நிலையில் நேற்றைய திடீர் நீர்வரத்து விவசாயிகளை மகிழ்விக்கும் வகையில் இருந்தது. இது தற்காலிகமான நீ வரத்துதான் என்றாலும், நிலத்தடி நீர் மட்டத்தை தொடர்ந்து மேம்படுத்தி வைத்திருக்கும் வகையிலான இந்த நீர் வரத்து நெல் சாகுபடி செய்திருக்கும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான விஷயமாகும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE