விழுப்புரம், : கோலியனுார் ஒன்றியம் சேர்ந்தனுார் ஊராட்சியில், அம்மா மினி கிளினிக்கை, அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார்.
சேர்ந்தனுாரில், ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைப்பதற்காக அமைச்சர் சண்முகம் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார்.கலெக்டர் அண்ணாதுரை, திட்ட இயக்குநர் மகேந்திரன், சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர்கள் கோலியனுார் சுரேஷ்பாபு, கண்டமங்கலம் ராமதாஸ், ஒன்றிய விவசாய அணி செயலாளர் கலியமூர்த்தி, துணை செயலாளர்கள் ஆதிமுருகன், நாராயணன், இணை செயலாளர் மஞ்சுளா சசிகுமார், பிரதிநிதி ராஜ், பேரவை செயலாளர் சிவா, பாசறை செயலாளர் விஜயசாந்தி, இணை செயலாளர் குமரவேல், அணி நிர்வாகிகள் தவமணி, ரவி, முரளி ராஜா, கிளை செயலாளர்கள் கருணாமூர்த்தி, ராமதாஸ், குணசேகர், கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE