மரக்காணம் : மரக்காணம் மற்றும் வானுார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், மரக்காணத்தில் 200 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி பயிர்களும், வானுாரில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை பயிர்களும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
மழை நீடித்தால், அறுவடைக்கு தயாரக இருந்த தர்பூசணி மற்றும் வேர்க்கடலை பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.அதேபோன்று, மரக்காணத்தில் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. மேலும் திடீரென மழை பெய்ததால் உற்பத்தி செய்த உப்புகள் கரைந்து வீணாகியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE