அன்னுார்:கோரிக்கைகளை வலியுறுத்தி, பொக்லைன் உரிமையாளர்கள் நான்காவது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.பொக்லைன் இயந்திரங்களின் உதிரிபாக விலை உயர்வைரத்து செய்ய வேண்டும். இன்சூரன்ஸ் கட்டணம் மற்றும் டீசல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, பொக்லைன் இயந்திர உரிமையாளர்கள்சங்கம் சார்பில், நான்கு நாள் வேலை நிறுத்தம் 18ம் தேதி துவங்கியது.
கரியாம்பாளையம், கணேசபுரம், கோவில்பாளையம் பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், அன்னுார், கோவை ரோட்டில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.நான்காவது நாளாக நேற்றும், அன்னுார் தாலுகாவில், பொக்லைன் இயந்திரங்கள் இயங்கவில்லை. இதனால் தனியார் நிறுவன கட்டுமானப்பணிகள், சாலை பணிகள், குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகள் பாதிப்புக்கு உள்ளாகின.சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மத்திய, மாநில, அரசுகள் டீசல், இன்சூரன்ஸ் மற்றும் உதிரிபாக விலையை குறைக்க வேண்டும்'என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE