அன்னுார்:பா.ஜ., இளைஞரணி மாநில மாநாட்டுக்கு, அன்னுாரில் இருந்து, 400 பேர் புறப்பட்டு சென்றனர்.சேலத்தில் பா.ஜ., இளைஞரணி மாநில மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் தேசிய தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு, அன்னுார் தெற்கு ஒன்றியத்தில் இருந்து, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ஜெயபால், ஒன்றிய இளைஞரணி தலைவர் அருண், பா.ஜ., ஒன்றிய தலைவர் விஜயகுமார் உள்பட 350 பேர் சேலம் புறப்பட்டுச் சென்றனர்.வடக்கு ஒன்றியத்தில், மாவட்ட இளைஞரணி செயலாளர் நந்தகுமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் தனீஷ் உட்பட 50 பேர் சேலம் புறப்பட்டுச் சென்றனர்.முன்னதாக அன்னுார் நகரில், பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாகச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE