அன்னுார்:அ.தி.மு.க.,வில் மூன்று அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்க வேண்டும் என்று நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.மூன்று மாதங்களுக்கு முன், அ.தி.மு.க., அன்னுார் ஒன்றியம், தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பிறகு, இரண்டு ஒன்றியங்களிலும், பேரவை, இளைஞர் அணி, எம்.ஜி.ஆர்., மன்றம், மாணவரணி இளைஞர் பாசறை, ஐ.டி., அணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அமைப்புசாரா அணி, கலை இலக்கிய அணி, மீனவர் அணி ஆகிய மூன்று அணிகளுக்கு இதுவரை நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'அன்னுார் ஒன்றியம், இரண்டாக பிரிக்கப்பட்டது. சிலருக்கு பொறுப்புக்கள் வழங்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பு ஒரு வாரத்தில் வர உள்ளது. அறிவிக்கப்படாத, மூன்று அணிகளுக்கும், இரண்டு ஒன்றியத்திலும், நிர்வாகிகள் நியமித்தால், பொறுப்பு கிடைத்த மகிழ்ச்சியில், ஆர்வமாக தேர்தல் பணி செய்வர்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE