சூலுார்:வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, காங்., கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவை வடக்கு மாவட்ட காங்.,கட்சி சார்பில், சூலுார் அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் பாதயாத்திரை நடந்தது.மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். வேளாண் சட்டங்கள் மற்றும் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. பாப்பம்பட்டி பிரிவில் இருந்து பள்ளபாளையம் வரை சென்ற பாதயாத்திரையில், ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE