கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேசிய திறனாய்வு தேர்வினை டி.இ.ஓ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 40 மையங்களில் நேற்று நடந்தது.மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 4 ஆயிரத்து 230 பேர் மட்டுமே தேர்வெழுதினர். 312 பேர் தேர்வு எழுதவில்லை.கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வினை, டி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த தேசிய திறனறி தேர்விற்கு 4,258 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 41 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.நேற்று நடந்த தேர்வில், 4,106 மாணவர்கள் தேர்வு எழுதினர். 152 மாணவர்கள் பங்கேற்கவில்லை.சி.இ.ஓ., கிருஷ்ணபிரியா, கோலியனுார் அரசு மேல்நிலைப் பள்ளி, நகராட்சி பி.என்.,தோப்பு மேல்நிலைப் பள்ளிகளில் நடந்த தேர்வை ஆய்வு செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE