சூலுார்:வரும், 25ல் கோவையில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். இது குறித்து, ஆலோசனை கூட்டங்கள், சூலுார் தொகுதிக்குட்பட்ட சுல்தான்பேட்டை, இருகூர், கருமத்தம்பட்டி மற்றும் மோப்பிரிபாளையத்தில் நடந்தது.தொகுதி பொறுப்பாளர் பேராசிரியர் கனகசபாபதி தலைமை வகித்தார். பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்களை, 75 வாகனங்களில் அழைத்து செல்வது என, முடிவு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் மணி, ஒன்றிய தலைவர்கள் சக்திவேல், மோகன்ராஜ், சூலுார் நகர தலைவர் அசோக், ரவிச்சந்திரன், கருமத்தம்பட்டி நகர தலைவர் மகேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE