திருக்கோவிலுார் : திருக்கோவிலூர் அடுத்த அம்மன்கொல்லைமேடு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 150 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
ஆசிரியர் சீனிவாசன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பள்ளி வளாகத்தில் பயன்தரும் 150 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார்.மரக்கன்றுகளை வளர்ப்பதன் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினார்.நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, துணைத் தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர் நாராயணன், கல்வியாளர் கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுந்தரி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE