செஞ்சி : மத்திய அரசின் பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்தின் கீழ் செஞ்சி வட்டார வளமையத்தில் ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
தலைமையாசிரியர் தீபலட்சுமி குத்துவிளக்கேற்றினார்.ஆசிரியை அல்லி வரவேற்றார். முன்னிலை வட்டார கல்வி அலுவலர்கள் அக்சிலியம் பெலிக்ஸ், கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். வளத்தி இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி பெண்குழந்தைகளின் சட்டபாதுகாப்பு குறித்தும், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி பெண்குழந்தைகள் பாதுகாப்பிற்கு அரசு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும் பேசினர். இதில் செஞ்சி வட்டாரத்தை சேர்ந்த அரசு பள்ளி பெண் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
5ம் வகுப்பு மாணவி ஓவியாவின் பரதநாட்டியம், அல்லிராணி மகளிர் குழுவினரின் கோலாட்டம், கும்மியாட்டம், கலைநிகழ்ச்சி, வில்லிசை ஆகியன நடந்தது.பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE