அன்னுார்:தினமலர் செய்தி எதிரொலியாக, அரசு டவுன் பஸ் இயக்கம் மீண்டும் துவங்கியது.அன்னுாரில் இருந்து அல்லப்பாளையம், கோனார்பாளையம் வழியாக ஆலத்துாருக்கு தினமும் ஏழு முறை டவுன் பஸ் இயங்கி வந்தது.கொரோனாவுக்கு பிறகு காலை 6:00 மணிக்கு மட்டும் இயங்கியது. இதனால் 20 கிராம மக்கள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து நேற்று முன்தினம் (20ம் தேதி) 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அல்லப்பாளையம் மக்கள் கூறுகையில், 'நேற்று முன்தினம் செய்தி வெளியானவுடன், காலை 11:30 மணிக்கு, 27ம் நம்பர் அரசு போக்குவரத்து கழக டவுன்பஸ் அல்லப்பாளையம் வழியாக இயங்கியது.இனி வழக்கம் போல் ஏழு முறை இந்த வழித்தடத்தில் இந்த பஸ் இயங்கும், என பஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE