சூலுார்:சூலுார் அருகே வாகன சோதனையில், 56 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.சூலுார் அருகே கோவை-பாலக்காடு ரோட்டில், ரேஷன் அரிசி கடத்தபடுவதாக, எஸ்.ஐ., ராதாகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே வந்த சரக்கு வேன்களை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இன்றி, 50 கிலோ கொள்முதல் கொண்ட, 56 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கார்த்தி என்பவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE