நெல்லிக்குப்பம் : கடலூர் மத்திய மாவட்ட காங்., சார்பில் மத்திய அரசின் வேளாண்மை சட்டங்கள் மற்றும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபயணம் சென்றனர்.
மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் வட்டார தலைவர் சீத்தாராமன், ராமகிருஷ்ணன், ரமேஷ், காமராஜ், கிஷோர்குமார், ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.துாக்கணாம்பாக்கத்தில் இருந்து கீழ்குமாரமங்கலம் வழியாக ரெட்டிச்சாவடி வரை நடைபயணம் நடந்தது. கிராம மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE